Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

டாக்டர் வீ.புகழேந்தி M.B.B.S., அவர்களுடன் சிறப்பு நேர்காணல்

மாற்று மருத்துவம்: DR. புகழேந்தி, நீங்கள் இப்போது தடுப்பு மருந்துகளின் போதாமை குறித்து பரப்புரையில் ஈடுபட்டுள்ளீர்கள். கல்பாக்கம் அணுமின் நிலையம் கதிர்வீச்சின் காரணமாக ஏற்படும் மருத்துவ நலப் பிரச்சனைகளில் போராடுபவராக இருக்கிறீர்கள். படித்த இளைஞர்களுக்கு மருத்துவ பயிற்சியளித்து கிராமப்புற மருத்துவ உதவியாளர்களை உருவாக்குகிறீர்கள். ஆங்கில மருத்துவத்தை எளிமைப்படுத்த வேண்டும், மாற்று மருத்துவங்களை ஆதரிக்கவேண்டுமென வாதாடுகிறீர்கள். குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளித்து சிறப்படைந்துள்ளீர்கள். இப்படியான மனித நேயராக, போராளியாக, நேர்மையாளராக, உண்மை விரும்பியாக ஆளுமை பெற உங்கள் பெற்றோர், பிறந்த கிராமம் இளமைக்கால சூழல், கல்லூரி பருவம் எவ்வாறு காரணமாய் இருந்தது?.

DR. புகழேந்தி: என்னுடைய ஆளுமையை பொறுத்தமட்டில் பெரும்பங்கு வகித்தவர்கள் 1. பெற்றோர் / குடும்பம் 2. நண்பர்கள் 3. ஆசிரியர்கள்... என்னுடைய அப்பா வீ. வீராசாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) எதிர்பாராத விதமாக 23-8-2006 அன்று விபத்தில் மரணமடைந்து என்னை / குடும்பத்தை மீளாத் துயரில் விட்டுச் சென்று விட்டார். அவரது எளிமை, தன்னம்பிக்கை, கடைசிவரை யாரையும் சார்ந்து இருக்காத தன்மை, எந்த காலத்திலும் பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருந்ததோடு, முடிந்த வரை பிறருக்கு உதவியாக இருந்தது. வறுமையின் பிடியில் வாடியபோதும் விடா முயற்சி, கடின உழைப்பால் முன்னுக்கு வந்தது. பிரச்சனை வந்த போதெல்லாம், சோர்ந்து போகாமல் அவற்றை எதிர்கொண்டு, தாண்டி வந்தது. நேர்மை, உண்மை, தான் ஏற்றுக்கொண்ட கருத்தை வாழ்வில் கடைபிடித்து, அவற்றை தயக்கமின்றி பிறரிடம் எடுத்துக்கூறி புரிய வைக்கும் முயற்சி... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனக்கும் அவருக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு அற்புதமான அப்பாவை இழந்து நிற்கும் சோகம் இன்னமும் என்னிடம் உள்ளது உண்மை.

அம்மா (லட்சுமி வீராசாமி) காந்தியவாதி, எளிமை, கருத்து வேறுபாடு இருந்தாலும் பிறரை அனுசரித்து போகும் பண்பு, வயதான இந்த காலத்திலும் இயன்றவரை உழைக்கும் தன்மை.... போன்றவை என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. கருத்து வித்தியாசம் நிறைய இருந்தாலும், இன்றளவும் எனக்கு உறுதுணையாக இருக்கின்ற அக்கா குடும்பத்தினர், அண்ணன் குடும்பத்தினர், அவர்கள் எனக்கு செய்து வரும் உதவி என்னால் மறக்க முடியாதது.

கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த ஆசிரியர்கள், திரு. வீ. வெங்கட்ராமன், திரு. சுப்ரமணியம், திரு. திருமலை கொழுந்து சுப்பிரமணியம், திரு. சத்யவான்....

கல்பாக்கத்தில் மருத்துவமனை தொடங்குவதற்கு முன் கிடைத்த நண்பர்கள் திரு. செல்லப்பாண்டியன், திரு. சண்முகம், திரு. ஸ்ரீதர், திரு. நடராஜன், திருமதி. கலாவதி, திரு. சுப்பாராவ், திரு. கோபால்....

மருத்துவர் நோயாளியின் துணையோடு மட்டும்தான் விசயங்களை கற்று தெரிந்து கொள்ள முடிகிறது என்பதை தெளிவாக சொன்னவர் நவீன மருத்துவ தந்தை மருத்துவர் வில்லியம் ஆஸ்லர். அதை முழுமையாக உள் வாங்கினால், மக்கள் மீதான அக்கறை வந்து சேரும்.

அடிப்படை நூல்கள் எதுவுமின்றி நோய்கள் குறித்து ஆய்வு செய்வது, முன்னெப்போதும் பயணப்படாத கடலின் புதிய வழித்தடங்களில் பயணிப்பதாகும். மாறாக நோயாளிகளே இல்லாமல், நூல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோய்களை அறிவது எப்போதும் கடலுக்கே செல்லாமல் இருப்பதற்கு ஒப்பாகும். - வில்லியம் ஆஸ்லர்.

மாற்று மருத்துவம்: தாங்கள் மருத்துவக்கல்வியை தேர்வு செய்தது எவ்வாறு?

DR. புகழேந்தி: சமுதாயப் பணி செய்வதற்கு மருத்துவம் ஒரு சிறந்த தளமாக இருக்கும் என்பதால்.

மாற்று மருத்துவம்: மதுரை மருத்துவக் கல்லூரியில் M.B.B.S., பயின்றுள்ளீர்கள். கல்லூரி கால வாழ்க்கை போராட்டம் பற்றி சொல்லுங்களேன்? மேலும் INTERNSHIP பற்றியும் ....

DR. புகழேந்தி: கல்லூரி வாழ்க்கையில் கவனத்துடனும், அக்கறையுடனும், ஆர்வத்துடனும் படிப்பில் ஈடுபட்டேன். INTERNSHIP காலமே நான் பரிட்சை பயமின்றி, தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை கொடுத்த காலம் என்பதால் அதை சிறிதளவு கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொண்டேன். அது பிற்காலத்தில் எனக்கு பேருதவியாக இருந்தது.

மாற்று மருத்துவம்: இப்போதெல்லாம் ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை P.G. முடித்தவர்களுக்கு தான் மதிப்புள்ளது. தாங்கள் ஏன் மேல்படிப்பில் சேரவில்லை?

DR. புகழேந்தி: எனக்கு P.G. சீட் இருமுறை கிடைத்தது. சமுதாயப் பணி செய்ய விரும்பியதாலும், Expert care ஐ விட Primary healthcare தான் (இந்தியாவை பொறுத்தமட்டில்) முக்கியமானது என எனக்கு பட்டதாலும் நான் P.G. சேரவில்லை. PRIMARY CARE மூலம் இன்னமும் அதிக உயிர்களை காக்கலாம்.

மாற்று மருத்துவம்: நீங்கள் ஏன் அரசுப் பணியில் சேரவில்லை.

DR. புகழேந்தி: நான் (CENTRAL) UPSC தேர்வில் வெற்றி பெற்றேன். அரசு பணி என்றால் படிநிலை இருக்கும். மேல் அதிகாரிகளுக்கு பணிந்தே நடக்கவேண்டும் என்பதுதான் நியதி. சுதந்திரமாக செயல்பட முடியாது போய்விடும் என்பதற்காக அரசு பணியில் சேரவில்லை.

மாற்று மருத்துவம்: தென்மாவட்டத்தை சேர்ந்த நீங்கள் கல்பாக்கத்தை தேர்ந்து மருத்துவப் பணியில் ஈடுபட்டது எவ்வாறு?

DR. புகழேந்தி: கல்பாக்கத்தில் கதிர்வீச்சு பற்றி ஆராயவும், மாற்று மருத்துவ முறைகளை கற்கவும் மேற்சொன்னவற்றில் எனக்கு ஆர்வம் இருந்ததும், துணை நிற்க நண்பர்கள் குழாம் இருந்ததும்தான் காரணங்கள்.

மாற்று மருத்துவம்: நீங்கள் IMAல் உறுப்பினராக இருக்கிறீர்களா? அதனுடனமான உங்கள் உறவும் முரணும் என்ன?

DR. புகழேந்தி: நான் IMA உறுப்பினராக இல்லை. உறவும் முரணும் Issueவைப் பொறுத்தது.

மாற்று மருத்துவம்: பதிவில்லா மருத்துவர்கள் விசயத்தில் IMA ன் செயல்பாடு தொடர்பாக தங்கள் மதிப்பீடு என்ன?

DR. புகழேந்தி: IMA என்பது பதிவு பெற்ற மருத்துவர்களுக்கான சங்கம். அதை கட்டிக்காப்பதில் / நியாயப்படுத்துவதில் அவர்கள் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இல்லை. நபர் / இயக்கம் என வரும்போது குறை / நிறைகள் இருக்கத்தான் செய்யும். நல்லன கொள்க. அல்லன தள்ளுக. தடுப்பூசி (போலியோ) பிரச்சனையை நாளிதழில் எழுதிய மருத்துவர் திரு. ஜேக்கப் M. புலியேல் IMA ன் VACCINATION sub committeன் உப தலைவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மாற்று மருத்துவம்: கி.பி. 2000ல் எல்லோருக்கும் மருத்துவ நலம் என்று முன்பு சொன்னார்கள். இப்போதோ எல்லாம் தலைகீழ் புதிய மருத்துவக் கொள்கை பற்றி தங்கள் பார்வை என்ன?

DR. புகழேந்தி: தற்சார்பு நிலைபோய், கொள்ளை இலாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மருந்து குழுமங்களுக்கு / (தனியார் மயமாக்கப்பட்டது) அதை கட்டிக்காக்கும் அரசு / சமுதாய அமைப்புக்கு சாதகமாகவும், சாதாரண ஏழை மக்களுக்கு எதிரானதாகவும் புதிய மருத்துவக் கொள்கை இருக்கும் என்பதில் ஐயம் துளியளவும் இல்லை. சுருங்க சொன்னால் வணிக நலம் காக்கப்பட்டு மக்கள் நலம் புறந்தள்ளப்படும். கியூபாவில் அனைவருக்கும் மருத்துவ நலம் உறுதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. அதற்குக் காரணம் புதிய மருத்துவக் கொள்கை போன்ற மருத்துவக் கொள்கைகளோ, மருத்துவர்களோ, மருந்துகளோ கிடையாது. அங்கு மக்கள் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் மருத்துவம் / சுகாதாரம் இலவசமாக கிடைக்கிறது. கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

மாற்று மருத்துவம்: பெருகிவரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் தொடர்பாக தங்கள் பார்வையென்ன?

DR. புகழேந்தி: இன்று சில மடங்கு விலையேற்றத்தில் கிடைக்கும் மருந்துகள் இனி கார்ப்பொரேட் மயமான பின் பல மடங்காகும். கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் மட்டும் வாங்கக் கூடியதாக மருந்துகள் உயரத்திலிருக்கும். ஏழைகளையும், நடுத்தர மக்களையும் ஆரம்பத்தில் ‘குறைந்த விலையில் மருத்துவம்’ என்று ஆசைக்காட்டி அழைப்பார்கள். பிறகு சட்டையைப் பிடித்து பணம் வசூலிப்பார்கள். மருத்துவ சேவை பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. மக்களுக்கான அடிப்படை மருத்துவம் மறுக்கப்படும். லாபகரமாக இயங்கும் மருத்துவ நிறுவனங்கள் என்றாலும் கூட குறைந்த சம்பளத்தில் டாக்டர்களும் நர்சுகளும் பணிபுரிய வேண்டியிருக்கும். இதுதான் வரப்போகும் கார்ப்பொரேட் மருத்துவமனைகளின் பொதுச்செயல்திட்டம். மேலும் தேவையற்ற பரிசோதனைகளும் மருந்துகளும் பெருமளவில் மக்கள் மீது திணிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி நோய் வராமல் காத்தல் என்பது பற்றி கார்ப்பரேட்டுகளுக்கு கடுகளவும் கவலை இருக்காது.

மாற்று மருத்துவம்: தாங்கள் மருத்துவ சேவையைக் காட்டிலும் சுகாதாரத் துறை மீது அதிக அக்கறை காட்டி வருகிறீர்கள். இன்றைய தமிழக - இந்திய நிலை என்ன? என்ன மாற்றை பரிந்துரைக்கிறீர்கள்?

DR. புகழேந்தி: மருத்துவத்தை மருத்துவமனை, மருத்துவர், மருந்து, மருத்துவச் சோதனைகள் (DISPERSARIES, DOCTORS, DRUGS, DIAGNOSTICS) எனும் 4Dக்குள் அடக்குவது சரியல்ல. அது அழிவுக்கு வழிவகுக்கும். நோய் எதிர்ப்புத் திறனை மக்களிடையே பெருக்கி நோய் வராமல் தடுப்பதே நிரந்தர தீர்வு தரும். அதற்கு அடிப்படை சுகாதாரத்திலும் மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளிலும் அதிக அக்கறைப்பட வேண்டியுள்ளது.

மாற்று மருத்துவம்: கனடாவைச் சேர்ந்த டாக்டர். நார்மன் பெத்யூனை அறிவீர்கள். அவரது வாழ்விலிருந்து இன்றைய மருத்துவர்கள் என்ன படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென விரும்புகிறீர்கள்.

DR. புகழேந்தி: மாவோ அவர்கள் மருத்துவம் மக்கள் சார்ந்ததாக மாறவேண்டும் / மக்கள் முடிவெடுக்கும் அதிகாரம் பெறவேண்டும் என்கிறார். Bare foot doctor conceptஐ மாவோ உருவாக்கியதற்கு டாக்டர். நார்மன் பெத்யூனின் பங்கு உண்டு. மருத்துவத்தை மக்கள் சார்ந்ததாக மாற்றுவது சமுதாய நலனை எண்ணும் அனைத்து மருத்துவர்களின் கடமையாக உள்ளதை நார்மன் பெத்யூனின் படிப்பினை மூலம் பெறவேண்டும். மேலும் சாமான்ய மக்களுக்கும் மருத்துவத்தைக் கற்றுத்தர முடியும் என்பதும் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

மாற்று மருத்துவம்: டாக்டர். பினாயக்.சென் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார்கள். தங்கள் எதிர்வினை என்ன?

DR. புகழேந்தி: மருத்துவம் மக்களை சென்றடையவேண்டும் என்ற தனது வரலாற்று கடமையைச் செய்தவர் திரு. பினாயக் சென். புரட்சிகர இயக்கங்களில் மருத்துவம் / மருத்துவர்களின் பங்கு அளவிடற்கரியது. (சேகுவேரா, பேராசிரியர்கள் ஹோ.சி.மின், அலண்டே) மக்களின் அடிப்படைத் தேவைகளில் மருத்துவமும் ஒன்றாக இருப்பதை நன்றறிந்த அரசு அவரை கைது செய்து மற்ற மருத்துவர்களுக்கு warning signal அனுப்பியுள்ளது. இந்த ஜனநாயக படுகொலையை கண்டிப்பாக எதிர்க்கவேண்டும்.

மாற்று மருத்துவம்: தடுப்பூசிகள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறீர்கள். தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் எடுக்கவில்லை. உங்களுக்கு ஆ.இ.எ. கொடுத்த பின்னும் பிரைமரி காம்ப்ளக்ஸ் பாதித்துள்ளது. இவை தாங்களே பேசிய செய்திகள். தடுப்பு மருந்துகள் தொடர்பான தங்கள் பார்வை என்ன?

DR. புகழேந்தி: நோய் தடுப்பு என்பது கொள்கை அளவில் சரியான ஒன்று. ஆனால் தடுப்பூசி / மருந்துகளை பொறுத்தமட்டில் வரலாற்று உண்மை வேறாக உள்ளது. (உ.ம்.: போலியோ சொட்டு மருந்து மூலம் போலியோ வருவது பிசிஜி மூலம் டிபியால் பாதிக்கப்படுவது) மேலும் பொது சுத்தம் / சத்தான உணவு / சுத்தமான நீர் / அடிப்படை வசதிகள் / வேலைக்கு உத்தரவாதம் / அதற்கு உரிய கூலி, மூலமே தடுப்பூசிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அவற்றை கட்டுக்குள் அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப விலை குறைந்த / பின் விளைவுகள் அற்ற / உறுதி செய்யப்பட்ட மருந்து / மாற்று மருத்துவ முறைகள் கையாளப்பட வேண்டும். நீடித்த / நிலைத்த சுகாதாரம் கிடைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மருந்துகள் பலன் ஓரளவு அளித்தாலும், பின் விளைவுகள் இருக்கும் பட்சத்தில் Informed consent / சாதகம் / பாôதகம் விளக்கப்படுவது முக்கியம் / மக்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

மாற்று மருத்துவம்: தொடர்ந்து பெரிய ஊடகங்களில் பங்காற்றி வருகிறீர்கள். அங்கே உங்களுக்கு போதுமான சுதந்தரம் உள்ளதா? குறிப்பாக 12-06-2008. விஜய் டி.வி - ‘இப்படிக்கு ரோஸ்’ நிகழ்ச்சியில் தங்கள் வெளிப்பாடு தொடர்ச்சியற்றிருந்ததே, ஏதேனும் நிர்பந்தங்கள் வந்தனவா?

DR. புகழேந்தி: பெரிய ஊடகங்களின் வாயிலாக சிலவற்றை (அதிக மக்கள் விசயம் புரிந்து கொள்வதற்காக) சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதில் எல்லா செய்திகளும் வராது. அதை வேறு ஊடகங்கள் / உத்திகள் மூலம் மக்கள் அறிந்து கொள்ளுமாறு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மாற்று மருத்துவம்: பேரா. அ.மார்க்ஸ் போன்ற கற்றறிந்தவர்களே “தடுப்பூசிகள் வந்த பின்பு தானே இங்கு அம்மை, போலியோ முதலான நோய்களெல்லாம் கட்டுக்கு வந்தன” (பார்க்க ஜூன் 2008 குமுதம் தீராநதி பக். 59) என்கிறார்கள். இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது?

DR. புகழேந்தி: இதில் உண்மையில்லை. அந்த கருத்து / புள்ளிவிவரம் தவறானது. அதற்கான ஆதாரங்கள் Ivan Illich புத்தகம் ‘Limits to medicine’ பக்கம் 24. VACCINATION DEBATE, VACCINATION MYTH, ALAN, PHILIPS போன்ற இணைய தளங்களில் உள்ளதை அவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இதில் தடுப்பூசி / மருந்து அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே போலியோ, அம்மை.... நோய்கள் கட்டுக்குள் வந்துள்ளன என்பது தெளிவாக உள்ளது.

‘எப்பொருள் யர்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிது’ இதில் இன்னொரு விஷயம் எந்த புள்ளி விபரங்களை / கருத்துக்களை நம்புவது அரசின் கருத்து / புள்ளி விபரங்களா? மாற்றுப் பாதைக்கான புள்ளி விபரங்களா? அ. மார்க்ஸ் அவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தவற்றை திருத்திக் கொள்வது அறிவு ஜீவிகளுக்கு அழகு.

மாற்று மருத்துவம்: அதே கட்டுரையில் பேரா. அ. மார்க்ஸ், தடுப்பூசிகளால் பிரச்சனைகள் எழுகின்றன என்பதற்காகத் தடுப்பூசியே தேவையில்லை எனச் சொல்லலாமா? எனக் கேட்கிறார். தங்கள் பதில் என்ன?

DR. புகழேந்தி: தடுப்பூசி பற்றிய வரலாற்று செய்திகள் மக்களுக்கு தெரியவந்தால், தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு கொடுக்கப்படுதல், நோய் தடுப்புக்கு என்னென்ன வழிகள் உள்ளன? அவற்றில் எது சிறந்தது? அந்தந்த நாட்டு சூழலுக்கு எது சரிவரும் / பொருந்திவரும். எதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தடுப்பூசியை பொறுத்த மட்டில் 7 முக்கிய கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் முக்கியமானவை.

1. அம்மை நோயை தடுக்க தடுப்பூசிகள் மட்டும்தான் ஒரே வழியா? வேறு வழிகள் உள்ளனவா?

அம்மை தடுப்பூசிகள் புழக்கத்தில் வருமுன்னரே பொது சுத்தம் / சுகாதாரம் சத்தான உணவு, சுத்தமான நீர், அடிப்படை வசதிகள் மூலமாகவே அம்மை நோய், 97% தடுக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து, அதற்கான உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மிகவும் அவசியமாகிறது.

2. அம்மை தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானதா?

இல்லை. கலப்படமற்ற அம்மை தடுப்பூசியே இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பது மருத்துவ ஏடுகளில் தெளிவாக உள்ளது. பின்னர் ஏன் அவற்றை பயன்படுத்த வேண்டும்.

3. அம்மை தடுப்பூசி போடுவதால் 100% அம்மை நோய் வராமல் தடுக்க முடியுமா?

இல்லை. 100% அம்மை தடுப்பூசி கொடுக்கப்பட்ட குழந்தைகளையும், அம்மை நோய் தாக்கியது மட்டுமின்றி, கொடுமையாக தாக்கியதிலிருந்து அம்மை தடுப்பூசியால் ஏற்படும் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குரியது. பின் ஏன் அம்மை தடுப்பூசியை போடவேண்டும்.

4. அம்மை தடுப்பூசி மக்களை சோதனை விலங்குகளாக மாற்றும் முயற்சியா?

இருக்கலாம். அமெரிக்காவில், தெற்கு கலிபோர்னியாவில், கருப்பின, லத்தின குழந்தைகளிடத்தும், பிற ஆப்ரிக்க நாடு மக்களிடத்து, இத்தகைய பரிசோதனைகள், குழந்தைகளில் தாய், தந்தையாருக்கு தெரியாமல் நடத்தப்பட்டு, பல குழந்தைகள் இறந்து போயுள்ளது வரலாற்றில் தெளிவாக உள்ளது.

5. அம்மை தடுப்பூசி இந்திய சூழலுக்கு பொருந்துமா?

மருத்துவர் ஆர்.கே. சந்திரா அவர்கள் செய்த ஆய்வில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி கொடுத்தாலும், அதனால் தூண்டப்படும் பாதுகாப்பு புரதத்தின் அளவு குறைவாக இருப்பதாகவும், அதனால் தடுப்பூசி கொடுத்தும், நோய் தடுக்க முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவரின் ஆய்வு British medical journalல் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய குழந்தைகளில் ஏறத்தாழ 50% சத்துக்குறைவால் (அதிலும் பெண்கள் அதிகம்) பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதால், அம்மைதடுப்பூசி இந்திய சூழலுக்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்பதை தெளிவாக கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. அம்மை தடுப்பூசி / பிற தடுப்பூசிகளில் “மக்கள் உரிமை” மீறப்படுகின்றதா?

ஆம். சட்டரீதியாக ஒரு மருந்தை ஒருவருக்கு கொடுக்கு முன், அதன் சாதக / பாதகங்களை விளக்கிய பின்பு, அவரது ஒப்புதலுடன் மட்டுமே, அவருக்கு கொடுக்கமுடியும். ஆனால் தடுப்பூசிகளை பொறுத்த மட்டும் அவற்றின் பாதகங்கள் மக்களுக்கு விளக்கப்படுவதில்லை. தடுப்பூசியின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்கு அரசு / மருத்துவர்கள் / மருந்து குழுமம் பொறுப்பேற்க வேண்டும். மேலை நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.

7. பொதுவாக நோய் தடுப்புக்கு எது சிறந்த வழி?

அனைத்து தரப்பு மக்களிடத்தும் (குறிப்பாக ஏழை மக்கள்) நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி (அனைவருக்கும் சத்தான உணவு, சுத்தமான நீர், அடிப்படை வசதிகள், பொது சுத்தம் / சுகாதாரம், அனைவருக்கும் வேலைக்கான உத்தரவாதம், அதற்கு உரிய கூலி, அதில் ஆண் / பெண் பாகுபாடற்ற நிலை .... போன்றவற்றை கிடைக்க செய்து) நோய் வராமல் பாதுகாப்பதே சிறந்த வழியாகும்.

பின்குறிப்பு - 1. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு தோல்வியாதிகள், எலும்பு / மூட்டுகளை பாதிக்கும் நாள்பட்ட வியாதிகள், சில புற்று நோய்கள் (Ovarian cancer) குறைவாக வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அம்மை நோய் பாதிப்பின் போது தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தியே இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆக அம்மையும் நன்மைக்கு என கொள்ளலாம்.

.மாற்று மருத்துவம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்துடன் தங்களின் போராட்டம் எதற்காக?

DR. புகழேந்தி: கல்பாக்கத்தில் கதிர்வீச்சு முக்கியப் பிரச்சனை. இங்குள்ள ஊழியர்களும், அவர் களது குடும்பத்தினரும் பொதுமக்களும் கதிர்வீச்சால் பாதிக்கப்படுகிறார்கள். கதிர்வீச்சின் மூலம் ஏற்படும் Multiple Mynaoma காரணமாக புற்றுநோய் வருவது உறுதியாகிறது. மருத்துவ அறிவியல் உண்மை இப்படியிருக்கும் போது அங்குள்ள யாரும், எந்த அமைப்புகளும் இதுபற்றி எதுவும் பேசாமலிருக்கும்படி ஏதோ ஒரு வகையில் வாயடைக்கப்பட்டுள்ளனர். இது மிக முக்கியமான மருத்துவ நல பிரச்சனை என்பதால் நான் தொடர்ந்து பேசியும், எழுதியும், இயங்கியும் வருகிறேன்.

மாற்று மருத்துவம்: தடுப்பூசிகள் குறித்து முடிவாக தாங்கள் பொதுமக்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு சொல்லும் வழிகாட்டல் என்ன?

DR. புகழேந்தி: மருத்துவர்களின் பயமுறுத்தலுக்கு பணியாமல், அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது, தேர்ந்தெடுப்பது நமது சட்டரீதியான உரிமை என்பதை உணர்வது, Right to information மூலம் தகவல்களை பெறுவது. பின் ஆழ்ந்து சிந்தித்து மக்களே முடிவெடுப்பது சரியானதாக இருக்கும் மக்கள் விரும்óபவில்லை எனில் தடுப்பூசிகளை திணிக்கக் கூடாது. மாற்றுமுறை மருத்துவங்களில் உள்ள தடுப்பு மருந்துகளில் நம்பிக்கை உள்ளவர்களின் சுதந்திரத்தில் தலையீடு கூடாது. தடுப்பூசிகளை ஏற்கவும், மறுக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு. அரசு எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மக்களின் பங்கை உறுதி செய்வது அவசியம். அதற்காக அரசை நிர்பந்திப்பது அத்தியாவசியம்.

மாற்று மருத்துவம்: நீங்கள் குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு மருத்துவம் செய்கிறீர்கள். நீங்களே மொத்த விலைக்கு மருந்துகளை சென்னையில் வாங்கி வந்து லாபமில்லாமல் மக்களுக்கு விற்கிறீர்கள். இதுமற்ற மருத்துவர்களையும் மருந்துக் கடைகளையும் பாதிக்காதா? இதனால் உங்களுக்கும் லாபமில்லையே?

DR. புகழேந்தி: மருத்துவர்கள் அதிகம் இல்லாததால் அவர்களை அதிகம் பாதிக்கவில்லை. கருத்தியல் மக்களுக்கு சென்றடையவில்லை என்பது உண்மை. அதை கொண்டு
செல்ல மக்கள் இயக்கங்கள் இங்கு இல்லை. மக்களில் பெரும்பாலானோர் இன்னமும் மருத்துவ செய்திகளை சரிவர புரிந்து கொள்ளவில்லை. அதனால் பிற மருத்துவர்களிடத்தும் அவர்கள் செல்கின்றனர். அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை மருந்து கடைகளில்தான் வாங்குகின்றனர். எனக்கு இலாபம் வருவது மட்டுமல்லாமல் என்னுடைய மருத்துவமனையில் இதுவரை சுயசார்புடன் இயக்கி காட்டியுள்ளேன்.

மாற்று மருத்துவம்: மருத்துவப் படிப்புக்கென்று ஒரு வரையரையுள்ள போது 10ம் வகுப்புமட்டுமே படித்தவர்களை தேர்வு செய்து எளிய பயிற்சிகள் அளித்து தேர்ந்த
மருத்துவர்களாக்குகிறீர்கள் இது சரியா Code of ethicக்கு எதிரானதில்லையா?

DR. புகழேந்தி: Code of ethics எதிரானதுதான். ஆனால், PRIMARY HEALTH CARE பொறுத்தமட்டில் 4 வித ALLOPATHY மருந்துகளே போதும். இந்த கருத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை சட்டப்பூர்வமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். சட்டரீதியான “போலி மருத்துவர்கள்” பற்றி மட்டுமே தான் தற்போது பேசப்படுகிறது. மாறாக, உண்மைக்கு மாறானவற்றைத் தவறு எனத் தெரிந்தே கடைப்பிடிப்பவர்கள் அனைவருமே போலி மருத்துவர்கள்தான் எனக் கொண்டால் முக்கால் பங்கு ஆங்கில மருத்துவர்களும், போலி மருத்துவர்கள் தான் என்ற உண்மையை மக்கள் எளிதாய் புரிந்து கொள்ள முடியும். PRIMARY HEALTH CARE ஐ பொறுத்த வரை அதற்கான மருத்துவ அறிவினை எளிதில் மக்களிடத்து கொண்டு செல்ல இயலும். மேலும் அது அவர்களின் அடிப்படை உரிமையும் கூட.

மாற்று மருத்துவம்: ஆங்கில மருத்துவத்தோடு ஓமியோ, சித்தா மீது கரிசனையான பார்வை கொண்டுள்ளீர்கள்? ஒருங்கிணைந்த மருத்துவம் தொடர்பான தங்கள் பார்வை என்ன?

DR. புகழேந்தி: நவீன அலோபதி மருந்து முறையிலுள்ள பிரச்சனைகளை உணர்ந்து அதை ஈடுகட்ட பிற மருத்துவமுறைகளிலுள்ள பின் விளைவு அற்ற மருந்துகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஒரே இடத்தில் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளை பல மருத்துவ முறைகளிலிருந்து தேர்ந்தெடுத்து உபயோகிப்பது அதிக பலனளிக்கும். உதாரணமாக ஹோமியோபதியில் ஆணிக்கால், மூலம், ஒற்றைத் தலைவலி, நாள்பட்ட நோய்கள், தோல் வியாதிகள், அஜீரண கோளாறுகள், அலர்ஜி நோய்கள் போன்றவற்றுக்கு நல்ல மருந்துகளை குறைந்த செலவில் வாங்கி நாங்களே சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளோம். மஞ்சள்காமாலைக்கு சிறந்த சித்தமருந்துகள் உள்ளன. எனது மருத்துவமனையில் பிறதுறை மருத்துவ நண்பர்களுடன் இணைந்து கூட்டு முயற்சிகள் செய்துவருகிறேன்.

மாற்று மருத்துவம்: எய்ட்ஸ் பற்றி சிறிய வெளியீடொன்று எழுதியுள்ளீர்கள். அதன் உட்கருத்தை எங்கள் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

DR. புகழேந்தி: எய்ட்ஸ் கிருமி உயிரி போர் யுத்தத்திற்காக செயற்கையாக தயாரிக்கப்பட்டகிருமி. தமிழ்நாடு இந்தியாவில் பெருகிவரும் புது நோய்களும் உயிரி போர் முறை உத்தியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே அத்தகைய தேடல்களில் நாம் ஈடுபட முடியும். நான் எழுதிய “எய்ட்ஸ் ஓர் உயிரியல் போர் ஆயுதம்?” நூலில் எனது விரிவான ஆய்வுகளை வாசகர்கள் படித்தறியுமாறு முன் வைத்திருக்கிறேன்.

இந்தியாவில் 3 முக்கிய சம்பவங்கள் உயிரி போர்முறை உத்திக்கான (Biological warfare) பெருத்த சந்தேகத்தின் பட்டியலில் உள்ளன.
1994 - சூரத் - பிளேக் நோய்
1996 - டெல்லி - டெங்கு சுரம்
2001 - சிலிகுரி (மேற்கு வங்காளம்) – மூளைக்காய்ச்சல்

இந்நோய்களுக்கான கிருமிகள் இந்தியாவிலுள்ள கிருமிகளிடமிருந்து மிகவும் மாறுபட்டவை. 2001 நவம்பரில் என்ற இதழில் அப்போதைய மத்திய உள்துறை செயலர் திரு. கமால்பாண்டே வெளியிட்ட செய்தி “இந்தியாவில் உள்ள சில நோய்களைக் கண்காணிக்கும் போது அவை உயிரி போர்முறை உத்தியாக இருக்கக்கூடும் தீவிர வாதிகளின் சதியாக அது இருக்கக்கூடும். இருப்பினும் இவற்றை எதிர்கொள்ள இந்தியரசு தயாராக உள்ளது”.

உயிர் போர் முறை உத்தி தமிழகம் - இந்தியா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. மேலும் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் AIDS தொற்றும் வாய்ப்பு 0-1-1% என்றே கணக்கிடப்பட்டுள்ளது. இரத்தம் மூலமே 90% க்கும் மேல் பரப்பப்படுகிறது. உயிரி போர் முறை உத்தியை மையமாக வைத்து விழிப்புணர்வூட்டும் விதத்தில் ‘ஈ’ திரைப்படம் இயக்கிய திரு. ஜெகநாதன் அவர்களுக்கு நன்றி. மேலும் ஒரு செய்தி - பல ஆப்ரிக்க நாடுகளில் பெரியம்மை தடுப்பூசி அதிகம் பயன்படுத்தப்பட்ட நாடுகளில் AIDS அதிகமாகவும், குறைவாக பயன்படுத்தப்பட்ட நாடுகளில் AIDS குறைவாகவும் இருப்பதிலிருந்து எய்ட்ஸ் பரவ அம்மை தடுப்பூசியும் முக்கிய காரணம் என்பது உறுதியாகிறது. எய்ட்ஸ் நோய் அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசி மூலமும், ஆப்ரிக்காவிலும் பெரியம்மை, போலியோ தடுப்பூசி மூலமும் பரப்பப்பட்டிருக்கிறது.

மாற்று மருத்துவம்: சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழுவில் உறுப்பினராக இருக்கிறீர்கள். அந்த அமைப்பின் பணிகள் என்ன?

DR. புகழேந்தி: சுற்றுச்சூழலைப் பாதிக்கும் Pollution, global warming, அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றியான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் முக்கியப் பணி. இவ்வமைப்பின் தலைவர் DR. ரமேஷ் எழுதிய கல்பாக்கம், கூடங்குளம், சேது சமுத்திர திட்டங்கள் குறித்தான விமர்சனங்கள் மிக முக்கியமானவை.

மாற்று மருத்துவம்: நிறைவாக மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் உங்கள் செய்தி ...

DR. புகழேந்தி: “நோயாளியின் துணையின்றி மருத்துவர் எதையும் கற்றுக்கொள்ள முடியாது” இது வில்லியம் சூஸ்லர் உணர்த்தும் உண்மை. நோய் வருவதற்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைதலே பிரதான காரணம். நோயிலிருந்து விடுபட நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தலே பிரதான வழி. ஆரம்ப சுகாதாரம் என்பதை மக்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று விடலாம். 4 வித மருந்துகள் தான். Power, color, potency, பெயர் தான் மாற்றம். அதற்கான சட்டரீதியான அங்கீகாரத்திற்கு போராடியாக வேண்டும்.

மருந்து மொத்த விலை / சில்லரை விலை வித்தியாசம் இருப்பதால், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு மருத்துவர்களுக்கு கிடைக்கும் விலையிலேயே அவற்றை குறைந்த விலையில் பொது விநியோகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். உள்ளூர் மருந்துகள், விலை குறைந்த மருந்துகள், பக்க விளைவுகள் அற்ற மருந்துகள் ஆக தற்சார்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உண்மையான மக்கள் சுகாதாரம் / நலம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் நோயிலிருந்து நீங்கும் அறிவினைக் கொடுப்பதை அங்கீகரித்தும், சுயமாக சிகிச்சை செய்து கொள்வதை அங்கீகரித்தும் அடிப்படை சுகாதாரத்தை சமமாக மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதற்கான உரிமையை அங்கீகரித்தும் - இவற்றுக் கிடையில் ஒரு சமச்சீரை உருவாக்குவதிலும்தான் உள்ளது.

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை நடத்துதல் கூடாது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்தா, ஹோமியோ, அக்குப் பஞ்சர் போன்ற பிரிவுகள் கொண்டு வரவேண்டும். அனைவருக்கும் அடிப்படை பொதுக்கல்வி / அடிப்படை மருத்துவக்கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். இவை அரசுகளும், மக்களும் பரஸ்பர புரிதலோடு நிறைவேற்ற வேண்டியவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com